Sunday, September 12, 2010

எல்லாம்...அம்மாவால வந்தது!


அப்பா, உனக்கு எப்போ
தொப்பை வந்திச்சு?

உங்கம்மா வந்ததுக்கப்புறம்...


உச்சந்தலையில வழுக்கை?

அதுவும் கூட,
அம்மா வந்தப்புறம்தான்...


கிட்டப்பார்வைக் கண்ணாடி?

எத்தனை தடவை
அதையே நான் சொல்லுறது?


வாசல்ல நிக்கிற வண்டி?

............

'அதுவும் அம்மாவாலன்னு
அழுத்தமாச் சொல்லுங்க'
-அடுப்படியிலிருந்து வந்தது குரல்...

அதெல்லாம்,
சொன்னாப் புரியாது
சீக்கிரம்போய் தூங்கு நீ,
செல்ல மகளை
மெல்ல நகர்த்தினான் அவன்!

படம் : நன்றி http://www.cultureandpublicaction.org

8 மறுமொழிகள்:

velji said...

இப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்பதை வழக்கமாக வத்திருக்கிறார்கள்.

நச்சென்று ஒரு கவிதை!

காமராஜ் said...

சுளீர்ன்னு உறைக்கிற மாதிரி கேள்வி.உண்மையல்லவா ?

ஹுஸைனம்மா said...

:-)))))))

அன்னு said...

செம கவிதை....யதார்த்த வரி...கலக்குங்க!!

சுந்தரா said...

//velji said...

இப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்பதை வழக்கமாக வத்திருக்கிறார்கள்.

நச்சென்று ஒரு கவிதை!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் வேல்ஜி!

சுந்தரா said...

//காமராஜ் said...

சுளீர்ன்னு உறைக்கிற மாதிரி கேள்வி.உண்மையல்லவா ?//

வாங்க அண்ணா...நிஜம்தான் :)

நன்றி!

சுந்தரா said...

//ஹுஸைனம்மா said...

:-)))))))//

சிரிச்ச முகத்துக்கு நன்றி ஹுசைனம்மா :)

நானானி said...

சமையலறையிலிருந்து வந்த பதில்தான் நெத்தியடி!!!
அதை அவர்களே சொல்ல மனசு வராதே!!!!!

Post a Comment

என்னுடைய வலைப்பக்கத்துக்கு வந்த உங்களுக்கு என் வரவேற்புகள்! வாசித்த இடுகைகளைப்பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் கோடி பெறும்! :)

LinkWithin

Related Posts with Thumbnails